Перейти к содержимому

மீள முடியாத கடன் ,வட்டி ,பணப்பிரச்சனை வறுமையில் இருந்து காக்கும் அதி சக்திவாய்ந்த தமிழ்பாடல்-பெரியவா

பேசும் தெய்வம் - மஹா பெரியவா

0:00 / 0:00

மீள முடியாத கடன் ,வட்டி ,பணப்பிரச்சனை வறுமையில் இருந்து காக்கும் அதி சக்திவாய்ந்த தமிழ்பாடல்-பெரியவா

269 536 просмотров · 2 года назад
பேசும் தெய்வம் - மஹா பெரியவா
198 тыс. подписчиков
269 536 просмотров · 2 года назад
Pesum Deivam Maha Periyava பாடல்_எண்_01‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ இடரினும் தளரினும் எனதுறுநோய் தொடரினும் உன்கழல் தொழு தெழுவேன் கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை மிடறினில் அடக்கி வேதியனே. இதுவோ எமை ஆளுமாறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே. திருப்பாற்கடலில், அமுதம் பெறும் பொருட்டுக் கடைந்தபோது தோன்றிய நஞ்சினைக் கழுத்தில் அடக்கித் தேவர் களைக் காத்த வேதநாயகனே ! வாழ்க்கையில் இடையூறு ஏற்பட்டுத் துன்பம் உண்டானாலும், இளமை நீங்கி மூப்பினால் தளர்ச்சி யுற்றாலும், தீவினைப்பயனால் நோய் தொடர்ந்து வந்தாலும், உன்திரு வடிகளைத் தொழுது வணங்குவேன். அத்தகைய அடியேனை நீ ஆட்கொள்ளும் தன்மை இதுவோ ? திருவாவடுதுறையில் வீற்றி ருக்கும் சிவபெருமானே ( உலக நன்மையின் பொருட்டுத் தந்தை செய்ய விரும்புகின்ற வேள்விக்குத் ) தேவைப்படுகின்ற பொருளை நீ எனக்குத் தரவில்லையானால் அஃது உன் திருவருளுக்கு அழகாகுமா ? ‪‎பாடல்_எண்_02‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ வாழினும் சாவினும் வருந்தினும் போய் வீழினும் உன் கழல் விடுவேன் அல்லேன் தாழ் இளந் தடம்புனல் தயங்கு சென்னிப் போழ் இளமதி வைத்த புண்ணியனே. இதுவோ எமை ஆளுமாறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே. ஒளிர்கின்ற செஞ்சடையில் குளிர்ச்சியான கங்கை யையும், பிறைச்சந்திரனையும் அணிந்த சிவபெருமானே ! இம்மையில் மண்ணுலகில் நல்வினைப் பயனால் இன்பம் அனுபவிக்கின்ற காலத் திலும், தீவினைப் பயனால் துன்புற்று வருந்தும் காலத்திலும், நன்னெறி யினின்று விலகித் தீநெறியில் செல்கின்ற காலத்திலும், வினைப் பயன்களை அனுபவித்து முடித்துச் சாகப்போகும் காலத்திலும், உன்னுடைய திருவடிகளை இறுகப் பற்றியதிலிருந்து நீங்கியவன் அல்லேன். ‪‎பாடல்_எண்_03‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ நனவினும் கனவினும் நம்பா உன்னை மனவினும் வழிபடல் மறவேன் அம்மான் புனல் விரி நறுங்கொன்றைப் போதணிந்த கனல் எரி அனல்புல்கு கையவனே. இதுவோ எமை ஆளுமாறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே. கங்கையையும், நறுமணம் கமழும் கொன்றை யையும் அணிந்து கனன்று எரிகின்ற நெருப்பைக் கையிலேந்தி யுள்ளவனே ! அனைவரின் நம்பிக்கைக்கும், விருப்பத்திற்குமுரிய உன்னை நனவிலும், கனவிலும், மனம் ஒன்றி வணங்குவதற்கு மறந் திலேன். ‪‎பாடல்_எண்_04‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ தும்மலொடு அருந்துயர் தோன்றிடினும் அம்மலர் அடியலால் அரற்றாது என் நா கைம்மல்கு வரிசிலைக் கணையொன்றினால் மும்மதில் எரிஎழ முனிந்தவனே. இதுவோ எமை ஆளுமாறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே. கையிலே மேருமலையை வில்லாக ஏந்தி அக்கினியைக் கணையாகத் தொடுத்து முப்புரங்களை எரியும்படி செய்தவனே ! தும்மல், அவற்றின் உபாதைகள் இவற்றால் துன்பம் வரும்பொழுதும் உன்னுடைய மலர் போன்ற திருவடிகளைப் போற்றுதல் அல்லாமல் என் நா வேறெதனையும் நவிலாது. திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே ! ‪‎பாடல்_எண்_05‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ கையது வீழினும் கழிவுறினும் செய்கழல் அடியலால் சிந்தை செய்யேன் கொய்யணி நறுமலர் குலாய சென்னி மையணி மிடறுடை மறையவனே.! இதுவோ எமை ஆளுமாறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே. ‪‎பாடல்_எண்_06‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ வெந்துயர் தோன்றியோர் வெருவுறினும் எந்தாய் உன்னடி அலால் ஏத்தாது என் நா ஐந்தலை அரவு கொண்டு அரைக்கசைத்த சந்தவெண் பொடியணி சங்கரனே. இதுவோ எமை ஆளுமாறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே. ‪‎பாடல்_எண்_07‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ வெப்பொடு விரவியோர் வினைவரினும் அப்பா உன்னடி அலால் அரற்றாது என் நா ஒப்புடை ஒருவனை உருவழிய அப்படி அழலெழ விழித்தவனே. இதுவோ எமை ஆளுமாறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே. ‪‎பாடல்_எண்_08‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ பேரிடர் பெருகி ஓர் பிணி வரினும் சீருடைக் கழல் அலால் சிந்தை செய்யேன் ஏருடை மணி முடி இராவணனை ஆரிடர் படவரை அடர்த்தவனே. இதுவோ எமை ஆளுமாறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே. ‪‎பாடல்_எண்_09‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ உண்ணினும் பசிப்பினும் உறங்கினும் நின் ஒண் மலர் அடி அலால் உரையாது என் நா கண்ணனும் கடி கமழ் தாமரை மேல் அண்ணலும் அளப்பு அரிது ஆயவனே. இதுவோ எமை ஆளுமாறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே. ‪‎பாடல்_எண்_10‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ பித்தொடு மயங்கியோர் பிணி வரினும் அத்தா உன்னடி அலால் அரற்றாது என் நா புத்தரும் சமணரும் புறன் உரைக்கப் பத்தர்கட்கு அருள்செய்து பயின்றவனே. இதுவோ எமை ஆளுமாறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே. ‪‎பாடல்_எண்_11‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ அலை புனல் ஆவடுதுறை அமர்ந்த இலை நுனை வேல்படை எம் இறையை நலம் மிகு ஞானசம்பந்தன் சொன்ன விலை உடை அருந்தமிழ்மாலை வல்லார் வினையாயின நீங்கிப் போய் விண்ணவர் வியனுலகம் நிலையாகமுன் ஏறுவர் நிலம்மிசை நிலையிலரே.