Перейти к содержимому

மோகனூர் நவலடியான் கோயில்| கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றும் நவலடியான் Mohanur Navaladiyan Temple

ஆன்மீகத்துடன் நட்பு

0:00 / 0:00

மோகனூர் நவலடியான் கோயில்| கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றும் நவலடியான் Mohanur Navaladiyan Temple

25 937 просмотров · 3 года назад
ஆன்மீகத்துடன் நட்பு
112 тыс. подписчиков
25 937 просмотров · 3 года назад
நாவலடியான் கோயில் Navaladi Temple: கோரிக்கை மனுக்களை நிறைவெற்றும் நாவலடியான்! சுயம்புவாக தோன்றிய நாவலடியான் கோயில் குறித்து இங்கே காண்போம். நாமக்கல் மாவட்டம் மோகனூர் பகுதியில் அமைந்துள்ளது நாவலடியான் திருக்கோயில். மோகனூரை ஆண்ட குறுநில மன்னன் பழயன் என்பவன் ஆண்டு வந்த காலத்தில் தான் நாவல் மரத்தடியில் சுயம்புவாக தோன்றிய நாவலடியானை தன் குலதெய்வமாகவும் அதன் அருகில் இருந்த வேப்ப மரத்தை தன் காவல் மரமாகவும் வழிபட்டு வந்துள்ளனர். மூலவர்: கருப்பசாமி உற்சவர்: நவலடியான் அம்மன்: செல்லாண்டி அம்மன் தீர்த்தம்: காவேரி தலவிருட்சம்: நாவல் மரம் ஊர்: மோகனூர் மாவட்டம்: நாமக்கல் கோயிலின் வடக்கு திசையில் ராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து முன்னோக்கி சென்றால் மிகப்பெரிய உயரத்தில் இரண்டு குதிரைகளும், அதன் அருகே வெண்கலத்தில் ஆன சிறிய குதிரை ஒன்றும் காணப்படுகின்றது. மேலும் குதிரை சிலை அருகே 1001 அடுக்கு மணி வேலும் கிழக்கு திசையில் பல நூறு ஆண்டுகளாக தலவிருட்சமாக இருக்கும் நாவல் மரத்தின் கீழ் குபேரனும், காலபைரவரும் பட்டவன் உட்பட காவல் தெய்வங்களும் காட்சியளிக்கின்றன. மேற்கு திசையில் சக்தி வேலும், சக்தி உண்டியல்களும் அமைந்துள்ளன. மூலவர் நாவல் அடியானை கடந்து செல்லும்போது இருபுறமும் கம்பீரமாக காவல் தெய்வங்களை கடந்து சென்றால் செல்லாண்டியம்மன் அமர்ந்து இருக்கும் நிலையில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். பிராத்தனை சுயம்புவாக காட்சியளிக்கும் சக்தி வாய்ந்த மோகனூர் நாவலடியான் கோயிலில் பக்தர்கள் தங்கள் உடலில் உள்ள பிணிகள் நீங்க, கல்வி, வேலை கிடைக்க, விவசாயம் செழிக்க, திருமண தடை நீங்க, நிலம் வாங்குவது, ஏமாற்றியவர்களுக்கு தண்டனை பெற்றுத்தர, களவு போன பொருட்கள் மீட்டு தருவது, குழந்தை வரம் போன்ற பல கோரிக்கை மனுக்களை எழுதி நாவலடியானிடம் வேண்டி வணங்கி அந்த சீட்டை பட்ட மரத்தில் கட்டி சென்றால் வேண்டுதல்கள் நிறைவேறும் என நம்பிக்கை. நேர்த்திகடன் வேண்டுதல் நிறைவேறினால் பக்தர்கள் சத்திய பூஜையை செய்கின்றனர். இந்த பூஜையில் ஆட்டுக்கிடா, கோழிகளை பலியிட்டு தென்னம்பாளை, கரும்பு, மது, சுருட்டு மேலும் பல்வேறு வாசனை திரவியங்கள் பொருட்களையும் வைத்து நாவலடியானுக்கு சத்திய பூஜையை இரவில் நடத்தி வந்தனர். நடைதிறப்பு அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படும் இந்த கோயிலில் இரவு 10 மணி வரை நடை சாத்தப்படாது என்பது சிறப்பு அம்சமாகும். கோயில் Google map link https://maps.app.goo.gl/7ENdb7VCmt8RY... அமைவிடம் நாமக்கலில் இருந்து வாங்கல் செல்லும் வழியில் நாமக்கலில் இருந்து சுமார் 18 கி.மீ தொலைவில் உள்ள மோகனூர் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. நாமக்கலில் இருந்து மோகனூர் செல்ல பேருந்து வசதி உள்ளது. மோகனூர் பேருந்து நிலையத்திலிருந்து இருந்து நவலடியான் கோயில் செல்ல ஆட்டோக்கள் உள்ளது. திருச்சியில் இருந்து காட்டுப்புத்தூர் வழியாக பரமத்தி வேலூர் செல்லும் பேருந்தில் பயணம் செய்து மோகனூர் நவலடியான் கோயில் அடையலாம். if you want to support us via UPI id nava2904@kvb Join this channel to get access to perks:    / @mathinam2301   தமிழ்