Virudhagireeswarar Temple Virudhachalam | Cuddalore | விருத்தகிரீஸ்வரர் கோவில் திருமுதுகுன்றம்
ula vlogs
0:00 / 0:00
Virudhagireeswarar Temple Virudhachalam | Cuddalore | விருத்தகிரீஸ்வரர் கோவில் திருமுதுகுன்றம்
72 просмотра · 11 дней назад
ula vlogs
111 подписчиков
72 просмотра · 11 дней назад
விருத்தகிரிஸ்வரர் கோவில் : பிரம்மா பூமியை உருவாக்க நினைத்த போது நீரை உருவாக்கினார். பிரம்மாவால் உருவாக்கப்படும் உடல்கள் விஷ்ணுவால் வெட்டப்பட்டு தண்ணீரில் மிதந்தன. இதைப் பார்த்தபிரம்மா நீர் மற்றும் சடலங்களின் சதையில் இருந்து கடினமான கலவையாக பூமி உருவாக்க வேண்டும் என்று சிவனிடம் வேண்டினார். சிவன் ஒரு மலை போல் தோன்றினார். இதனால் பல மலைகள் உருவாகியது. அம்மலையில் பிரம்மாவுக்கு இடம் இல்லாததால் அவர் வருத்தமாக இருந்தார். பிரணவதேவன் தோன்றி பிரம்மாவிடம் உண்மைகளை கூறினார். பரமாவை சக்தியாக வெளிப்படுத்தினார். பிரம்மா சிவனை வணங்கினார். சிவபெருமான் சடப்பொருளான சதைப்பகுதியையும், தண்ணீரினையும் ஒரு கடினமான வடிவத்தில் இணைத்து அதை மொ்த்தினி என்று அழைத்தார். சிவன்பிரம்மாவிற்கு மலைகளில் தங்குவதற்கு இடம் கொடுத்தார். அவர் மலையில் இருந்து வேறுபட்டவர் அல்ல என்றும் பிரம்மாவிடம் கூறினார். பிரம்மாவின் மலைகள் சிவன்மலைக்குப் பிறகு வந்தவைகள். எனவே சிவன் மலையின் பெயராக பழமலை (பழைய மலை) என்று பெயரிடப்பட்டது. பூமியின் மேலே கடுமையாக அழுத்தம் கொடுத்து. சிவன் லிங்கமாக தோன்றினார். அதை வணங்குபவர்கள் அவர்கள் விரும்பும் அனைத்தையும் பெறுவார்கள். கல்வெட்டுகளில். இராஜராஜசோழன், விக்ரம சோழன், மூன்றாம்ராஜா ராஜ சோழன் மூன்றாம் குலோத்துங்க சோழன், ஏழிசை மோகன குலோத்துங்க சோழன் கடவர்த்திதன் வீரசேகர கடவா்த்திதன்,அரச நாராயண கச்சிராயன், கோபெரும் சிங்கன், கச்சிராயன் என்று அழைக்கப்படுகின்ற அரசநாராயண ஏழிசை மோகன், விக்ரம பாண்டியன், வீராபாண்டியன், சுந்தர பாண்டியன், மாறவர்ம பாண்டியன், கோனரிமையா பாண்டியன், அரியன உடையார், போக்கனா உடையார், கம்பன் உடையார், வீரவிஜயராயர், முப்பிடி கிருஷ்ணபதி. ஆகிய அரசர்களின் பெயர்கள் குறிக்கப்பட்டுள்ளன.