Перейти к содержимому

ஸ்ரீ நரசிம்மர் சுப்ரபாதம் ஏகாதசி அன்று மறக்காமல் கேளுங்கள் கோடீஸ்வரயோகம் தரும் SriLakshmiNarasimhar

Realmusic Bakthi padalgal

0:00 / 0:00

ஸ்ரீ நரசிம்மர் சுப்ரபாதம் ஏகாதசி அன்று மறக்காமல் கேளுங்கள் கோடீஸ்வரயோகம் தரும் SriLakshmiNarasimhar

504 887 просмотров · 1 год назад
Realmusic Bakthi padalgal
37,4 тыс. подписчиков
504 887 просмотров · 1 год назад
@RealmusicBakthipadalgal ►Subscribe to our Youtube Channel:    / @realmusicbakthipadalgal   #SriLakshmiNarasimhar ஸ்ரீ நரசிம்மர் சுப்ரபாதம் ஏகாதசி அன்று மறக்காமல் கேளுங்கள் கோடீஸ்வரயோகம் தரும் SriLakshmiNarasimhar நரசிம்மரின் வடிவங்கள் நரசிம்மர் பல வடிவங்களாக வழிபடுகின்றனர் அவற்றில் 9 முக்கிய வடிவங்களை நவ நரசிம்மர் என வழிபடுகின்றனர். அவையாவன: உக்கிர நரசிம்மர் குரோத நரசிம்மர் வீர நரசிம்மர் விலம்ப நரசிம்மர் கோப நரசிம்மர் யோக நரசிம்மர் அகோர நரசிம்மர் சுதர்சன நரசிம்மர் லட்சுமி நரசிம்மர் நரசிம்ம அவதாரம் விஷ்ணுவின் நான்காம் அவதாரம் ஆகும். இதில் இவர் சிங்கத்தின் தலையையும் மனித உடலையும் கொண்ட நர-சிம்ம அவதாரம் எடுத்தார். நரசிம்மரின் உருவம் சிங்க முகத்துடனும் நகங்களோடும் மனித உடலோடும் தோற்றமளிக்கிறது.[1] வைஷ்ணவர் பலர் நரசிம்மரை முதன்மைக் கடவுளாக வழிபடுகின்றனர். தனது பக்தர்களைத் தக்க தருணத்தில் வந்து காக்கும் கடவுளாக இவர் கருதப்படுகிறார். தன் பரமபக்தனான பிரகலாதனைக் காத்து இரணியன் என்ற கொடிய அரக்கனை வதம்செய்ய எடுத்த அவதாரமே நரசிம்மம் என்பது தொன்ம நம்பிக்கை (ஐதிகம்). சத்யுகத்தில் காசியப முனிவருக்கும் தித்திக்கும் இரணியர்கள் என அழைக்கப்படும் இரணியகசிபு மற்றும் இரணியாக்சன் இரு அசுர சகோதரர்களும் பிறந்தனர். கூடலுக்கு ஆகாத அந்தி நேரத்தில் கூடியதால் அவர்களுக்கு அசுரர்கள் பிறந்து விட்டதாகக் கூறப்படுகிறது.[4] வராக அவதாரத்தில் விட்டுணுவால் இரணியாட்சன் கொல்லப்பட்ட பின்னர் வெகுண்ட இரணியன் விட்டுணுவை அழிப்பதற்குத் தக்கபடித் தன்னை வலியவனாக்கிக் கொள்ள பிரம்மாவை நோக்கித் தவமிருந்தான்.[5] பிரம்மாவும் காட்சி தந்தார். இரணியன் தனக்கு மனிதர்களாலோ, மிருகங்களாலோ, பறவைகளாலோ, இரவிலோ, பகலிலோ வீட்டிற்கு உள்ளேயோ, வெளியேயோ எந்தவித ஆயுதத்தாலும் மரணம் சம்பவிக்கக் கூடாது. எவ்வுலகிலும் தனக்குப் போட்டியாக யாருமே இருக்கக்கூடாது. அனைத்து உயிரினங்களுக்கும் கடவுளருக்கும் தான் மட்டுமே தலைவனாக இருக்க வேண்டும். அத்தகைய சக்தி வேண்டும். யோகங்களினாலும் தவத்தாலும் அடையக்கூடிய் காலத்தால் அழியாத வல்லமை தனக்கு வேண்டும் என்று மிக புத்திசாலித்தனமாக வரம் கேட்டான்.[6] பிரம்மாவும் அளித்தார். கிடைத்த சக்தியை வைத்துக்கொண்டு அட்டூழியங்கள் புரிய ஆரம்பித்தான் இரணியன், அவனை அடக்க யாராலும் முடியவில்லை. பிரகலாதன் பிறப்பு பிரகலாதன் கொடிய அரக்கனான இரண்யகசிபுக்கும் (இரணியன்) கயாதுக்கும் மகனாகப் பிறந்தான். இரணியகசிபு, தான் பெற்ற சாகா வரத்தால் ஈரேழு உலகத்திலும் ஆட்சி புரிந்து வந்தான். தான்தான் கடவுள் என்றும் அனைவரும் தன்னைத்தான் வணங்க வேண்டும் என்றும் அனைவரையும் கட்டாயப்படுத்தி வந்தான். அவனது மனைவி கர்ப்பம் தரித்தாள். நாரத மாமுனி ஆனவர், தாயின் கர்ப்பத்தில் இருந்த குழந்தை பிரகலாதனுக்கு அரி ஸ்ரீமன் நாராயணன் (விஷ்ணு) தான் இந்த ஈரேழு உலகத்திற்கும் கடவுள் என்று போதித்து விட்டார். இரணியனின் ஆத்திரமும் அழிவும் இரணியனை வதம் செய்யும் நரசிம்மரும் அவரை வணங்கி நிற்கும் பிரகலாதனும் அவனது தாய் கயாதுவும் பிரகலாதன் பிறந்து அவன் கல்வி பயிலும் காலம் வந்ததும் அவனுக்கு அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியார் இரணியன் தான் கடவுள் என்று போதிக்க, பிரகலாதன் அரி ஸ்ரீமன் நாராயணன் தான் தன் கடவுள் என்று சாதித்தான். இந்தச் செய்தியறிந்த இரணியன் பிரகலாதனை மாற்றச் சாம, பேத, தான தண்டம் என பலவிதங்களிலும் முயற்சி செய்தான். அவனது முயற்சிகள் எல்லாம் தோல்வியில் முடிந்தன. ஆத்திரமடைந்த இரணியன் தன் மகன் என்றும் பாராமல் கொல்ல முயற்சி செய்தான். ஆனால் ஒவ்வொரு முறையும் தோல்வியே அடைந்தான். யானையின் காலால் இடரச் செய்தல், கொடிய விஷம் கொண்ட பாம்புகளோடு அடைத்து வைத்தல், விஷமருந்தச் செய்தல், தீக்குள் இறங்கச் செய்தல் போன்ற அவனது கொடுமுயற்சிகளில் இருந்து பிரகலாதன், தான் கொண்ட அசைக்க முடியாத விஷ்ணு பக்தியினால் விஷ்ணுவின் உதவியால் காப்பாற்றப்பட்டதாகப் புராணங்கள் கூறுகின்றன. இரணியனின் சகோதரி ஹோலிகா அவளை நெருப்பு தீண்டாத வரம் பெற்றிருந்தாள். அவள் மடியில் பிரகலாதனை உட்கார வைத்து தீக்குள் இறக்கிய போது பிரகலாதன் விஷ்ணு பெயரைச் சொல்லி வேண்ட நெருப்பு பிரகலாதனை ஒன்று செய்யவில்லை, மாறாக ஹோலிகா நெருப்பில் மாண்டாள். இந்நிகழ்வு இந்தியாவில் ஹோலிப் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. Hello Viewers.., ____________________________________________________ எங்களது விடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் லைக், கமெண்ட், ஷேர் பண்ணுங்க. Please don't forget to subscribe. பார்த்ததற்கு மிக்க நன்றி. Press the 🔔 for notifications நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும். Real cinemas Whatsapp Channel : https://whatsapp.com/channel/0029Va58... Real entertainment Whatsapp Channel : https://whatsapp.com/channel/0029Va9F... Instagram :   / realcinemas2007   Telegram : https://t.me/realmusic2007 Twitter :   / realcinemas2007   Facebook :   / realmusicindia   sharechat : https://sharechat.com/profile/realcin... minminiapp : https://minmini.app/author-news/RealC...