Перейти к содержимому

வாழ்க்கையில் நிம்மதியே இல்லையா? 🥺 ராமர் சலிப்பு நீங்க வழிபட்ட தலம்! | மரண சனி பரிகார ஸ்தலம்!

ஆன்மீகத்துடன் நட்பு

0:00 / 0:00

வாழ்க்கையில் நிம்மதியே இல்லையா? 🥺 ராமர் சலிப்பு நீங்க வழிபட்ட தலம்! | மரண சனி பரிகார ஸ்தலம்!

5 388 просмотров · 1 день назад
ஆன்மீகத்துடன் நட்பு
112 тыс. подписчиков
5 388 просмотров · 1 день назад
சலிப்பேரி பிரம்மபுரீஸ்வரர் கோயில் மன உளைச்சல், மனச்சலிப்பு, குடும்பத்தில் பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர, பூர்வஜென்ம சாபங்கள் மற்றும் பித்ரு தோஷங்கள் நீங்க இங்குள்ள பிரம்ம தீர்த்தக் கரையில் வழிபட்டு மங்களாம்பிகை சமேத பிரம்மபுரீஸ்வரரை வணங்குவது விசேஷமானது. மூலவர்: பிரம்மபுரீஸ்வரர் அம்பாள்: மங்களாம்பிகை தீர்த்தம்: பிரம்ம தீர்த்தம் தலவிருட்சம்: புரசமரம் மாவட்டம்: திருவாரூர் தலவரலாறு அசுரன் ஜலந்தரனைச் சிவபெருமான் வதம் செய்ய முயன்ற போது, அவனது மனைவி பிருந்தையின் (துளசி) கற்பின் ஆற்றலால் அவனுக்கு மரணம் நிகழவில்லை. உலக நன்மைக்காக மகாவிஷ்ணு பிருந்தையின் கற்பைக் கலைத்து ஜலந்தரனை வதம் செய்ய உதவினார். இதனால் கோபமடைந்த பிருந்தை, "என்னை என் கணவரிடமிருந்து பிரித்தது போல, நீங்களும் உங்கள் மனைவியைப் பிரிந்து சொல்லொணாத் துயரத்தை அடைவீர்கள்" என்று மகாவிஷ்ணுவிற்குச் சாபமிட்டார். (பிருந்தை தவம் செய்த இடம் இக்கோயிலுக்கு அருகில் 'பத்தினியாள்புரம்' என்று அழைக்கப்படுகிறது). ஸ்ரீ ராமரின் மனச்சலிப்பு நீங்கிய தலம்: பிருந்தையின் சாபத்தால் ராமாவதாரத்தில் ஸ்ரீ ராமர் சீதையைப் பிரிந்து காட்டில் துயரப்பட்டார். சீதைத் தேடி அலைந்த ஸ்ரீ ராமர், சாபத்தின் தாக்கத்தாலும் பிரிவின் துயராலும் மிகுந்த மனச்சலிப்பும் (Frustration) மன உளைச்சலும் அடைந்தார். பெயர்க்காரணம்: இத்தலத்திற்கு வந்த ராமர், பிரம்ம தீர்த்தத்தில் நீராடி பிரம்மபுரீஸ்வரரை தீவிரமாக வழிபட்டார். அவரது பூசையால் மகிழ்ந்த சிவபெருமான் ராமருக்குக் காட்சியளித்து, அவசியமான மன அமைதியை அளித்து, "உன் சாபம் நீங்கியது; விரைவில் சீதையை அடைவாய், உனக்கு உதவியாக என் அம்சமான அனுமன் இருப்பான்" என்று அருளினார். ராமரின் மன சலிப்பு எரிந்து (நீங்கி) சாந்தி அடைந்த தலம் என்பதால், இத்தலம் "சலிப்பு + எரி = சலிப்பேரி" என்று பெயர் பெற்றது. அஷ்டமா சித்தி அருளும் தலம் கோயில் பலகையிலும் குறிப்பிடப்பட்டுள்ளபடி, இத்தலம் அஷ்டமா சித்திகள் அருளும் சிறப்புமிக்க தலம் ஆகும். எட்டுப் பட்டை லிங்கம்: மூலவர் 8 பட்டைகளுடன் (8 facets) அமைந்திருப்பது ஆகாயம், வாயு, அக்னி, நீர், நிலம், சூரியன், சந்திரன், ஆன்மா ஆகிய அஷ்ட மூர்த்தங்களையும், அஷ்ட திக்கின் சக்திகளையும் குறிக்கிறது. சித்தர்கள் வழிபாடு: அணிமா, மகிமா, லஹிமா, கரிமா, பிராப்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் ஆகிய எட்டு வகையான சித்திகளையும் பெறப் பல சித்தர்கள் இத்தலத்தில் மறைமுகமாகத் தவம் இயற்றி சிவபெருமானை வழிபட்டு அருள் பெற்றுள்ளனர். படைப்புத் தொழிலில் ஏற்படும் தடைகள் நீங்க பிரம்மதேவன் இத்தலத்து பிரம்ம தீர்த்தத்தில் நீராடி சிவனை பூஜித்த தலம். சிவனை பூஜித்த பிரம்மதேவனுக்கு, சிவன் கோஷ்ட தெய்வமாக சிவ ஆலயங்களில் எழுந்தருளும் பேற்றை இங்கு வழங்கினார். ராமர் & அனுமன் லிங்கங்கள்: பிரதான மூலவர் தவிர, ஸ்ரீ ராமர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட லிங்கமும், அனுமன் பிரதிஷ்டை செய்து வழிபட்ட லிங்கமும் இக்கோயில் வளாகத்தில் தனித்தனியாக அருள் பாலிக்கின்றன. பிரார்த்தனை மன அழுத்தம் நீங்கி மன அமைதி கிடைக்க வழிபட வேண்டிய தலம். இந்த தலத்தில் உள்ள மரண சனி பகவானை வழிபட மரண சனி காலத்தில் ஏற்படும் மரண சனி தோஷம் நிவர்த்தி ஆகும். அமைவிடம் நன்னிலத்தில் இருந்து மாப்பிள்ளை குப்பம் வழியாக குடவாசல் செல்லும் வழியில் உள்ளது. நன்னிலத்தில் இருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது. கோயில் Google Map Link https://maps.app.goo.gl/4S9dw5pyKiRFK... ஆலய அர்ச்சகர் தொலைபேசி எண் +91 8973521507 மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் +91 7994347966 if you want to support our channel via UPI Id nava2904@kvb Join Our Channel WhatsApp Group https://chat.whatsapp.com/LRPxBQMNHRA... Join Our Meena Vaishnavi Devi Tours What's app Group https://chat.whatsapp.com/BXKUkdyJhO5... Join this channel to get access to perks:    / @mathinam2301   தமிழ்