Перейти к содержимому

நிரந்தர வேலை கிடைக்க அருளும் 7000 ஆண்டு பழமையான தலையெழுத்தை திருத்தி அமைக்கும் திருத்தலையூர் ஈஸ்வரன்

ஆன்மீகத்துடன் நட்பு

0:00 / 0:00

நிரந்தர வேலை கிடைக்க அருளும் 7000 ஆண்டு பழமையான தலையெழுத்தை திருத்தி அமைக்கும் திருத்தலையூர் ஈஸ்வரன்

18 877 просмотров · 1 год назад
ஆன்மீகத்துடன் நட்பு
112 тыс. подписчиков
18 877 просмотров · 1 год назад
தலையெழுத்தை திருத்தி அமைக்கும் ராவணன் மற்றும் சப்த ரிஷிகள் வழிபட்ட திருத்தலையூர் சப்தரிஷீஸ்வரர் கோயில் மூலவர்: சப்தரிஷீஸ்வரர், ராவணேஸ்வரர் அம்பாள்: குங்குமாம்பிகை தலவிருட்சம்: 7000 ஆண்டு பழமையான மருத மரம் ஊர்: திருத்தலையூர் மாவட்டம்: திருச்சி ராமாயணக் காலத்துக்கு முற்பட்ட கிராமம் இது எனப்படுகிறது. ஆதியில், ‘திருகுதலையூர்’ என்று அழைக்கப்பட்டு, பின்னர் காலப்போக்கில் மருவி, ‘திருத்தலையூர்’ என்றாகிப் போனது. ஆலய அமைப்பு கோயிலை தொலைவில் நின்று பார்க்கும்போது சற்றே பெரியதாகவும், புராதனக் கோயிலாகவும் தெரிகிறது. தீர்த்தக் குளத்துக்கு எதிரே திருக்கோயில் விரிந்து காட்சி தருகிறது. கிழக்கு நோக்கிய சிவன் கோயில். ராஜகோபுரம் கடந்து உள்ளே சென்றால் காலத்தால் அழியாத கல் தூண்களைத் தாங்கி நிற்கும் மண்டபத்தின் மேல் விதானக் கூரையின் நீண்ட கருங்கற்களைப் பெயர்த்து எடுத்து புனரமைத்து மீண்டும் மேல் விதானத்தில் பொருத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. உள்பிராகார மண்டபத்தில் தனி சன்னிதியில் அமைந்துள்ளது, ராவணன் பிரதிஷ்டை செய்து வழிபட்ட சிவலிங்கம். பத்து தலை ராவணன் உருவாக்கிய லிங்கம் என்பதாலோ என்னவோ, சிவலிங்கம் கொஞ்சம் பெரிதாகவே அமைந்துள்ளது. கருவறையில் சுயம்பு மூர்த்தமாக ரிஷிகள் வழிபட்ட சிறிதான சிவலிங்கம். கருவறை மூலவர் மிக எளிமையாகக் காட்சியளிக்கிறார். கிழக்கு நோக்கிக் காட்சி தரும் மூலவர் சன்னிதிக்கு வெளியே தெற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கிறாள் அருள்மிகு குங்குமாம்பிகை. ஈசன் மற்றும் குங்குமாம்பிகையை தரிசித்து விட்டு, உள்பிராகாரத்தை வலம் வந்தபின் மகாமண்டபத்தின் உள்ளே, அகோர வீரபத்திரர் தனி மேடையில் பளிச்சென அருள்பாலிக்கிறார்.தனி மேடையில் அகோர வீர பத்திரர்க்கு இடதுபுறமாக விநாயகர், வலதுபுறமாக ருத்ர பசுபதி நாயனார். கருவறை பின்புறம் தல விருட்சம் மருத மரம். அதன் அடி பாகத்தில் முண்டும் முடிச்சுகளுமாகக் காணப்படுகிறது. முண்டும் முடிச்சுகளுமாக எனச் சொல்லக்கூடாதாம். அவை அத்தனையும் ரிஷிகள் ஐக்கியமான பாகங்களாம்" பொது தகவல் இசைக்கலைஞர்கள் ,ஜோதிடர்கள் தீரா நோயால் அவதிப்படுபவர்கள் அவசியம் வழிபட வேண்டிய ஸ்தலம். மண்டோதரி குங்குமம் பெற்ற ஸ்தலம்.சப்தரிஷிகள் மருத மரத்தில் உறைந்த ஸ்தலம். பிராத்தனை பெண்கள் மற்றும் ஆண்களின் திருமணத் தடை நீக்கும் வரப்ரசாதியாகத் திகழ்கிறாள். குங்குமாம்பிகை. திருமண தடை நீங்க, நிரந்தர வேலை கிடைக்க, தலை எழுத்து மாற வழிபட வேண்டிய தலம். அகோர தலம் இது அகோர தலமாகும். அகோரஸ்திர மந்திரம் ஜபித்து, யாகம் வளர்த்துதான், இந்தத் திருத்தலத்தில் அமர்ந்து சிவனை அழைத்தான் ராவணன். ராவணனின் மிகக் கடுமையானப் தபஸின் விளைவாக இறுதியில் சிவபெருமான் நெற்றிக் கண்ணைத் திறந்து காட்சியளித்தார். சிவனின் நெற்றிக்கண்ணிலிருந்து அகோர வீரபத்திரர் உதித்த தலமாம் இது. தலவரலாறு இலங்கையிலிருந்து ராவணன் கயிலாயம் நோக்கிக் கிளம்பி வரும் வழியில் இப்பகுதியில் வனாந்திரமாக இருக்கக் கண்டு, இங்கேயே தங்கி விட்டார். இப்பகுதியில் யாகம் வளர்த்து, சிவனை வழிபட்டுக் கொண்டிருந்த ரிஷிகள், பத்து தலை ராவணனைக் கண்டவுடன் பயந்து நடுங்கி, மருத மரத்தில் ஐக்கியமாகி விடுகின்றனர். அந்த மருத மரமே திருக்கோயிலின் தல விருட்சமாக மாறியது. ‘ரிஷிகள் வழிபட்ட லிங்கத்தை தான் வழிபடுவதா?’ என எண்ணிய ராவணன், உடனே புற்று மண்ணெடுத்துப் புதிதாக அவன் கைகளாலேயே ஒரு பெரிய சிவலிங்கத்தை உருவாக்கி வழிபடத் தொடங்கினான். தனக்கு ஈஸ்வரன் நேரிலே தரிசனம் தர வேண்டும் என்று யாகங்கள் வளர்த்து தொடர்ந்து வழிபட்டான். ஆனால் ஈஸ்வரனோ, தரிசனம் தரவில்லை. யாகம் தொடர்கிறது. நாட்கள் நகர்கின்றன. மிகவும் வெறுத்துப் போன ராவணன், ஒரு கட்டத்தில் தனது பத்து தலைகளில் ஒவ்வொன்றாகத் திருகி யாகத்தில் வீசினான். அப்படி ஒன்பது தலைகளையும் திருகி வீச, ஒரு தலை மட்டுமே மிஞ்சியது. அப்போதும் பரமேஸ்வரன் காட்சி தராததால், தனது பத்தாவது தலையையும் திருகி யாகத்தில் வீச முயற்சித்தான் ராவணன். மனம் கசிந்துபோன சிவபெருமான், நெற்றிக் கண்ணைத் திறந்தபடி ராவணனுக்குக் காட்சியளித்தார். அதோடு, ராவணனால் திருகி வீசப்பட்ட ஒன்பது தலைகளையும், சிவபெருமானே வரமளித்து ராவணனுக்கு ஒட்ட வைத்து மீண்டும் அவனைப் பத்து தலை ராவணனாக உருவாக்கினார். தான் பிடித்து வைத்த புற்று மண்ணினால் ஆன சிவலிங்கத்தை வணங்கி வழிபட்டு கயிலாயம் கிளம்பிச் சென்றான் ராவணன். இத்தனைச் சிறப்புகள் பெற்றது இந்தத் திருத்தலையூர் திருத்தலம்" . அமைவிடம் முசிறியில் இருந்து புலிவலம் வழியாக துறையூர் செல்லும் பேருந்தில் பயணம் செய்து செல்லும் வழியில் தண்டலை அடைந்து அங்கிருந்து இத்தலம் அடையலாம். துறையூரில் இருந்து நாமக்கல் செல்லும் வழியில் உள்ள கண்ணனூரில் இருந்து 7 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த கோயில். சென்னை, அரியலூர் மற்றும் திருச்சி போன்ற பகுதிகளில் இருந்து வருபவர்கள் நெ.1 டோல்கேட், வாத்தலை, குணசீலம், ஆமூர், ஏவூர், திண்ணகோணம் தண்டலை வழியாக இத்தலம் அடையலாம். கோயில் Google Map Link https://maps.app.goo.gl/9ARa9tYUeiVBY... ஆலய அர்ச்சகர் தொலைபேசி எண் +91 9790329346 மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் +91 7994347966 லால்குடி சப்தரீஸ்வரர் கோயில் தரிசனம்    • ஏழு ஜென்ம பாவம் தீர்க்கும் லால்குடி சப்தரி...   திண்ணக்கோணம் சுயம்பு பசுபதீஸ்வரர் கோயில் தரிசனம்    • திண்ணக்கோணம் சுயம்பு பசுபதீஸ்வரர் கோயில் |...   வாத்தலை பாதாள ஈஸ்வரர் கோயில் தரிசனம்    • வாத்தலை பாதாள ஈஸ்வரர் கோயில் | சனி தோஷம் ந...   if you want to support our channel via UPI Id nava2904@kvb Join Our Channel WhatsApp Group https://chat.whatsapp.com/LRPxBQMNHRA... Join this channel to get access to perks:    / @mathinam2301   தமிழ்