Перейти к содержимому

நீலகண்ட வன பேச்சியம்மன் | காரையார் | Nelakanda VanaPechiyamman Temple | Papanasam |Sorimuthu Ayyanar

NELLAI NARAN

0:00 / 0:00

நீலகண்ட வன பேச்சியம்மன் | காரையார் | Nelakanda VanaPechiyamman Temple | Papanasam |Sorimuthu Ayyanar

7 263 просмотра · 3 г. назад
NELLAI NARAN
9,6 тыс. подписчиков
7 263 просмотра · 3 г. назад
தாமிரபரணி ஆற்றின் கரையில் அமையப்பெற்றுள்ள இக் கோவிலை தெற்கு கோவில், வடக்கு கோவில் என்று இரண்டாக பிரிக்கிறது காட்டாற்று ஓடை. தெற்கு பகுதி கோவிலில் தான் சொரி முத்து அய்யனார், சங்கிலி பூதத்தார், மகா லிங்கம் சுவாமி ஆகியோர் சன்னதிகள் அமையப் பெற்றுள்ளன. தெற்கு கோவிலின் திருச்சுற்றின் தெற்கே சாஸ்தா சன்னதியும், பலாவடி பேச்சி சன்னதியும் இருக்கிறது. மேற்கே மேற்கு வாசல் பூதத்தாரும், அவருக்கு எதிரே மணி முழுங்கி மரத்தடி சன்னதியும், தீர்த்தக் கட்டமும் இருக்கிறது. வீடுகளில் ஒன்றாக திகழும் சொரிமுத்து அய்யனார் சாஸ்தா திருத்தலத்தில் பூஜைகள் மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றன காலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தஜாம அனைத்தும் இந்த திருக்கோவிலில் வேகமாக நடந்து வருகிறது.வடக்கு பகுதி கோவிலில் மேற்கு திசை நோக்கிய தனிக் கோவிலாக பட்டவராயர் கோவில் அமையப் பெற்றுள்ளது. பட்டவராயர் கோவிலில் செருப்பு காணிக்கை செலுத்தப்படுவதும், கிடா வெட்டி பலியிடுதலும் செய்யப்படும் திருக்கோவில் சிறப்புக்கள்: பரிவார மூர்த்திகள்: சங்கிலி பூதத்தார் - அகத்தியர், பிலாவடி இசக்கியம்மன், மேலவாசல் பூதத்தார், மணிமுழுங்கி மரத்தடி விநாயகர், மணிமுழுங்கி மரத்தடி பூதத்தார், மணிமுழுங்கி மரத்தடி பாதாளகண்டிகை, மணிமுழுங்கி மரத்தடி கும்பாமணி, கரடி மாடசாமி, சுடலை மாடசாமி, பேச்சியம்மன், பிரம்மராட்சி அம்மன், தூசி மாடசாமி, தளவாய் மாடசாமி, கச மாடன் - கச மாடத்தி, பொம்மக்கா - திம்மக்கா உடனுறை பட்டவராயன் சுவாமி. பைரவர். திருக்கோவில் விருட்சம்: மணிமுழுங்கி மரம் எனப்படும் இலுப்பை மரம். திருக்கோவில் தீர்த்தம்: தாமிரபரணி தல சிறப்பு தலத்தின் சிறப்பு: 800 ஆண்டுகள்பழமை வாய்ந்த திருத்தலமாக சொரிமுத்து அய்யனார் சாஸ்தா திருக்கோவில் விளங்குகின்றது . முருகனுக்கு ஆறுபடை வீடு இருப்பது போலவே சொரிமுத்து அய்யனாருக்கும் சொரிமுத்து அய்யனார் கோயில்,குளத்துப்புழை, அச்சன்கோவில், பந்தளம், சபரிமலை, ஆரியங்காவு என ஆறுபடை வீடு உள்ளது. சபரிமலை சாஸ்தா கோவில் உருவாவதற்கு முன்பாகவே இந்த சாஸ்தா கோவில் அமைந்துள்ளது என்று கருதப்படுகிறது. இங்குள்ள சொரிமுத்து அய்யனார் சாஸ்தா இடதுகாலை மட்டும் குத்துக்காலிட்டு, வலது காலை தொங்கவிட்டபடி, அமர்ந்த நிலையில் சற்றே இடப்புறமாக திரும்பியிருக்கிறார். இவருக்கு எதிரே ஒரே பீடத்தில் குதிரை, நந்தி, யானை வாகனங்கள் அமைந்து இருப்பதும், இவரது சன்னதியிலேயே சப்தகன்னியர்கள் அமைந்து இருப்பதும், முன்மண்டபத்தில் உள்ள பைரவரின் எதிரே நாய் வாகனம் அமைந்து இருப்பதும் விசேஷமான அம்சமாக சொல்லப்படுகிறது. குலதெய்வம் எதுவென்று தெரியாதவர்கள் இந்த சாஸ்தாவை முழுமையான நம்பிக்கையோடு வழிபடுகிறார்கள். Please Subscribe and Support me: Sorimuthu ayyanar travel :    • Karaiyar Sorimuthu Ayyanar Temple Bus Trav...   Sorimuthu ayyanar temple vlog:    • சக்தி வாய்ந்த காவல் தெய்வம் சொரிமுத்து அய்...   Pathala sembu Murugan:    • ஏற்றத்தை கொடுக்கும் பாதாள செம்பு முருகன் |...   Kanakkanpatti sidhar:    • கணக்கன்ப்பட்டி சித்தர் நிகழ்த்திய அற்புதங்...