Перейти к содержимому

திருக்கோடிக்காவல் கோடீஸ்வரர் கோயில் |வளமான வாழ்வு தரும் வடுக பைரவர் |3 கோடி மந்திரங்கள் வழிபட்ட தலம்

ஆன்மீகத்துடன் நட்பு

0:00 / 0:00

திருக்கோடிக்காவல் கோடீஸ்வரர் கோயில் |வளமான வாழ்வு தரும் வடுக பைரவர் |3 கோடி மந்திரங்கள் வழிபட்ட தலம்

89 074 просмотра · 3 года назад
ஆன்மீகத்துடன் நட்பு
112 тыс. подписчиков
89 074 просмотра · 3 года назад
திருக்கோடிக்காவல் கோடீஸ்வரர் கோவில் கயிலாயத்தை விடவும், சிவன் விரும்பி உறையும் தலம் இந்த திருக்கோடிக்காவல் ஆலயம் என்கிறது தலபுராணம் - காசியை விட ஈசனின் அருள்மிகுந்த உள்ள தலம் இது. மூலவர் : கோடீஸ்வரர் (வேத்ரவனேஸ்வரர்), கோடிகாநாதர் அம்பாள் : திரிபுர சுந்தரி, வடிவாம்பிகை தல விருட்சம் : பிரம்பு தீர்த்தம் : சிருங்கோத்பவ தீர்த்தம், காவிரிநதி புராணப் பெயர் : வேத்ரவனம் ஊர் : திருக்கோடிக்காவல் மாவட்டம் : தஞ்சாவூர் மாவட்டம் பாடியவர்கள் : திருஞானசம்பந்தர், சுந்தரர், திருநாவுக்கரசர் பெரிய கோயில்' என்றால் அனைவரின் நினைவுக்கும் வருவது தஞ்சை பெரிய கோயில் தான். ஆனால், மற்றொரு பெரிய கோயிலும் தமிழகத்தில் இருக்கிறது. அதுவே, கும்பகோணம் அருகிலுள்ள திருக்கோடிக்காவல் கோடீஸ்வரர் கோயில். திருக்கயிலாயத்தை விட உயர்ந்த இந்த திருத்தலத்தைத் தரிசிப்போமா. சிறப்பம்சம்: திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரரால் பாடல் பெற்ற தலம் இது. இங்குள்ள ஈசன் கோடீஸ்வரர் என்ற பெயரில் சுயம்பு மூர்த்தியாகவும், அம்பாள் திரிபுரசுந்தரி என்ற திருநாமத்துடனும் அருள்பாலித்து வருகின்றனர். இத்தல ஈசன் சதுர பீடத்தில் உயர்ந்த பாணத்தோடு காண்போரைக் கவரும் வண்ணம் வீற்றிருக்கிறார். பிராத்தனை இங்குள்ள கரையேற்று விநாயகரை சதுர்த்தி நாளில் வழிபட்டால் நம் குறைகள் யாவும் களைந்து நல்ல வண்ணம் வாழ வைப்பார். இம்மையிலும், மறுமையிலும் பக்தர்களைக் கரையேற்றுபவர் என்பதால் இவருக்கு இந்தப் பெயர் ஏற்பட்டது. இத்தலத்தில் பிரம்பு தல விருட்சமாக இருக்கிறது. சிருங்க தீர்த்தம் மற்றும் காவிரி தல தீர்த்தங்களாக உள்ளன. கண்டராதித்த சோழன் மனைவி செம்பியன் மாதேவி வழிபட்டு பேறுபெற்றத் தலம். பால சனீஸ்வரர்: இங்கு ஜேஷ்டாதேவி, பால சனீஸ்வரர், துர்வாசர் ஆகியோருக்கு சந்நிதிகள் உள்ளன. சனி பகவான், எமதர்மன், சித்ரகுப்தர், துர்வாச மகரிஷியும் எதிரெதிர் சந்நிதிகளில் வீற்றிருக்கிறார்கள். பால சனியின் தலையில் சிவலிங்கம் உள்ளது. காக வாகனத்திற்கு பதில் கருட வாகனம் இருக்கிறது. மூலவரின் கருவறை வெளிச்சுவரில் சிறப்புமிக்க, அழகோவிய சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அவற்றில் கூத்தபிரான் எனப்படும் நடராஜர், சிவகாமி அம்பாளுடன் இருக்கிறார். அவரது வலதுபுறம் பேய் உருவில் காரைக்கால்_அம்மையார் தாளமிட்டபடி இருந்து ஈசனின் திருநடனத்தைக் கண்டு ஆனந்தமடையும் சிற்பம் அனைவரையும் கவரக் கூடியது. முப்பத்து_முக்கோடி தேவர்களும் வழிபட்டு பேறுபெற்றதும், தங்களுக்கு ஏற்பட்ட சாபம் நீங்கப்பெற்றதுமான தலம் இது. இதனால், இது பெரியகோயில் என்ற அந்தஸ்தைப் பெற்றது. தல வரலாறு: தன் கணவனைக் கொன்று விட்டு, விபச்சாரியாக வாழ்ந்த "லோககாந்தா' என்ற பெண், தன்னுடைய இறுதி காலத்தில் இந்த தலத்திற்கு வந்தாள். அவள் மரணமடைந்ததும் எம தூதர்கள் அங்கு வந்தனர். அதற்குள் சிவ தூதர்கள் சென்று அந்தப் பெண்ணை சிவலோகத்திற்கு அழைத்துச் சென்று விட்டனர். எமன் சிவபெருமானிடம் காரணம் கேட்டான். அதற்கு சிவபெருமான், "திருக்கோடிக்கா தலத்திற்கு வந்து என்னை தரிசிப்பவர்களை அண்ட உனக்கு உரிமையில்லை' என்றார். காசியைப் போல இந்த தலத்தில் வாழ்பவர்களுக்கும் எமபயம் இல்லை. காசியை விட ஈசனின் அருள்மிகுந்த உள்ள தலம் இது. கயிலாயத்தை விடவும், சிவன் விரும்பி உறையும் தலம் இந்த திருக்கோடிக்கா ஆலயம் என்கிறது தலபுராணம். கைலாயம் செல்ல முடியாதவர்கள் வாழ்வில் ஒரு முறையாவது, திருக்கோடிக்கா வந்து ஈசனை தரிசனம் செய்தால் கைலாயம் சென்ற பலன் கிடைக்கும். அமாவாசை நாட்களில் இங்கு சென்று வருவது மேலும் சிறப்பு. ஒரு முறை திருப்பதி வெங்கடாசலபதியை தரிசிக்க, பக்தர்கள் திருப்பதி சென்றனர். திருப்பதி வெங்கடாசலபதி அவர்களுக்கு காட்சி கொடுக்காமல், "திருக்கோடிக்காவில் எனது தங்கை திரிபுரசுந்தரி ஆவன செய்வாள்' என்று அருளினார். இதையடுத்து அவர்கள் திருக்கோடிக்கா வந்தனர். அப்போது அவர்களுக்கு இத்தலத்தில் வீற்றிருக்கும் திரிபுரசுந்தரி அம்பாள், திருப்பதி வெங்கடாசலதியாக காட்சி கொடுத்து அருளினாள். எனவே, இது செல்வம் தரும் தலமாகவும் விளங்குகிறது. நந்திதேவரின் கொம்பினால் உண்டான இத்தல சிருங்கோத்பவ தீர்த்தம் மிகச் சிறப்பானது. இத்தலம் வந்து வழிபட்டால் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும். திறக்கும் நேரம்: காலை 6.30-1200, மாலை 5.30-8.00. இருப்பிடம்: கும்பகோணத்தில் இருந்து 20 கி.மீ., நவக்கிரக தலமான கஞ்சனூரில் இருந்து 3 கீ மீ தொலைவில் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து கதிராமங்கலம் வழியாக குத்தாலம் மற்றும் மயிலாடுதுறை செல்லும் பேருந்தில் பயணம் செய்து இத்தலம் அடையலாம். கோயில் Google map link https://maps.app.goo.gl/2c7h1jweCT4gx... ஆலய அர்ச்சகர் தொலைபேசி எண் +91 9159514727 மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் +91 7994347966 if you want to support us via UPI id 9655896987@ybl Join this channel to get access to perks:    / @mathinam2301   தமிழ்