Перейти к содержимому

ஆன்மிகத்தின் உச்சநிலை உபதேசம் - "சும்மா இரு" | முருகன் | அருணகிரிநாதர் | கந்தர் அனுபூதி

இதோ கொஞ்சம் அமுதம்

0:00 / 0:00

ஆன்மிகத்தின் உச்சநிலை உபதேசம் - "சும்மா இரு" | முருகன் | அருணகிரிநாதர் | கந்தர் அனுபூதி

13 016 просмотров · 2 мес. назад
இதோ கொஞ்சம் அமுதம்
17,8 тыс. подписчиков
13 016 просмотров · 2 мес. назад
✍️'சும்மா இருத்தல்' என்பதுதான் எல்லா விதமான ஆன்மிகப் பாதைகளின் இறுதி முடிவு. முருகன் குருவாக வந்து போதித்த உபதேச வாக்கியம் 'சும்மா இரு' என்பதுதான் என்று அருணகிரிநாதர் கந்தர் அனுபூதியில் ஒரு பாடலில் பதிவு செய்கிறார். அந்த உபதேசத்தைப் பெற்ற அந்தக் கணத்திலேயே தாம் உற்ற ஆத்ம அனுபவத்தையும் அதில் எடுத்துரைக்கிறார். "செம்மான் மகளைத் திருடும் திருடன்...' என்று தொடங்கும் அந்த ஞானப் பாடலுக்கான விளக்கம், குரு-மாணவி உரையாடல் வடிவில் மிக எளிய மொழி நடையில் இந்தக் காணொளியில் இடம் பெற்றிருக்கிறது. இடை வழியில் எங்கும் குழம்பி நிற்காமல் ஆன்மிகத்தின் இறுதி இலக்கு எது என்று தெளிவு பெறுவதற்கு, ஆத்ம சாதகர்களுக்கு இந்தப் பதிவு நிச்சயம் உதவும். 👉உள்ளே... ✨ ஜீவாத்மாவை மாயையிடமிருந்து திருடும் பரமாத்மா என்ற நெஞ்சை உருக்கும் தத்துவம்! ✨ "சொல் அறுதல்" - உள்ளே ஓடும் எண்ணங்களை எப்படி அழிப்பது? ✨ "சும்மா இருத்தல்" - இது சோம்பேறித்தனமா? அல்லது உச்சபட்ச தத்துவ ஞானமா? ✨ காண்பவன் - காணப்படும் பொருள் (Subject-Object Duality) என்ற இரட்டை நிலை அழிவது எப்படி? ✨ "பொருள் ஒன்றும் அறிந்திலனே" - ஞானம் வந்தவுடன் உலகம் ஏன் மறைந்து விடுகிறது? ---------------------- தொடர்புடைய பதிவுகள்: அருணகிரிநாதரின் அத்வைத அனுபவத்தைக் கூறும் இன்னொரு கந்தர் அனுபூதிப் பாடல் விளக்கம்: 📌   • என்னை விழுங்கிய இறைவன் (அருணகிரிநாதரின் அத...   சும்மா இருப்பது சுலபமானது அல்ல என்று கூறும் தாயுமானவரின் பாடல் விளக்கம்: 📌   • சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறம்!...   இதுபோல் ஞானியர் பலரின் அரிய கருத்துகள் பொதிந்த பாக்களை, எளிய நடையில் விளக்குகின்ற பதிவுகள் பலவற்றைக் கீழ்க்கண்ட இணைப்பில் காணலாம்: 📌   • ஞானக் கவியமுதம்   --------------------------- ஆன்மிகமும் மெய்யியலும் சார்ந்த பல்வேறு வகைப்பட்ட தத்துவக் கோட்பாடுகளை, கருத்துகளை, சிந்தனைகளைத் தேர்ந்தெடுத்துத் தரும் வலையொளித் தளம் இது. அவற்றை எழுத்து வரிகளுடன் பதிவிடுகிறோம். காகிதப் பதிப்புப் புத்தகங்களின் பக்கங்களில் வரி வரியாக, வார்த்தை வார்த்தையாகப் பார்வையைத் தோயவிட்டுப் பெறுகின்ற வாசிப்பனுபவத்தை, கணினித் திரையிலும் கைப்பேசித் திரையிலும் உங்களைப் பெறவைக்க ஒரு முயற்சி. பாற்கடல் கடைந்து அடைந்த அமுதம் போல, நூற்கடல் கடைந்து அடைந்த அமுதத்தை இங்கே பரிமாறுகிறோம். -------------------- #TamilSpirituality #MuruganSongs #KandarAnubhuti #Arunagirinathar #NonDualityTamil