Перейти к содержимому

சிக்கல் சிங்காரவேலர் கோவில் தலவரலாறு | வியர்க்கும் முருகன் சிலை | Sikkal Singaravelar Temple

ஆன்மீகத்துடன் நட்பு

0:00 / 0:00

சிக்கல் சிங்காரவேலர் கோவில் தலவரலாறு | வியர்க்கும் முருகன் சிலை | Sikkal Singaravelar Temple

46 098 просмотров · 3 года назад
ஆன்மீகத்துடன் நட்பு
112 тыс. подписчиков
46 098 просмотров · 3 года назад
சிக்கல் சிங்காரவேலன் திருக்கோவில்:🙏🏽 வெண்ணெய் உகந்த சிவபிரான் எழுந்தருளிய தலம் ; சிவாலயத்தில், பெருமாளுக்கும் தனிச் சந்நிதி அமைந்துள்ள ஆலயம் ; சப்தவிடங்கத் தலமாக இல்லையெனினும் மரகதவிடங்கராக ஸ்ரீதியாகேசர் காட்சி தரும் கோயில் ; தாயைப் பணிகிற தனயனாக, முருகப்பெருமான் அருள்பாலிக்கிற க்ஷேத்திரம் ; சோழ தேசத்துக்கே உண்டான கட்டுமலைக் கோயில் அமைந்த தலம் ; கடல் நாகைக் காரோணத்தின் பஞ்சகுரோசப் பெரும்பதிகளில் ஒன்றான தலம்..... அருள்மிகு நவநீதேஸ்வரர் திருக்கோயில், சிக்கல் - நாகப்பட்டினம் மூலவர் : நவநீதேஸ்வரர் (வெண்ணெய் பெருமான்) உற்சவர் : சிங்கார வேலவர் அம்மன்/தாயார் : சக்தியாயதாட்சி (வேல்நெடுங்கண்ணி) தல விருட்சம் : மல்லிகை தீர்த்தம் : க்ஷீர புஷ்கரிணி (பாற்குளம்) ஆகமம்/பூஜை : காரண ஆகமம் பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன் புராண பெயர் : மல்லிகாரண்யம், திருச்சிக்கல் ஊர் : சிக்கல் பாடியவர்கள் : திருஞானசம்பந்தர் , அருணகிரிநாதர் திருவிழாக்கள் கந்தசஷ்டி திருவிழா –ஐப்பசி மாதம் (சக்திவேல் வாங்குதல் வியர்க்கும் மகிமை) 🅱 *தல சிறப்பு:*🅱 🎭 இத்தலத்தில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். 🎭 கந்தசஷ்டி திருநாளின் முதல் நாள் முருகன் இத்தல அம்மனிடமிருந்து வேல் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால் இங்குள்ள அம்மனுக்கு வேல்நெடுங்கண்ணி என்ற பெயர் ஏற்பட்டது. 🎭 ஒருமுறை, பஞ்சத்தில் பிடியில் சிக்கிய தேவலோகப் பசு காமதேனு நாயின் ஊனைத் தின்றதால் ஏற்பட்ட சாபம் தீர்த்த தலம் சிக்கல். 🎭 ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் வேல் வாங்கும் விழாவில் சூரபத்மனை அழிப்பதற்காக தன் தாயிடம் வேல் வாங்கி முருகப்பெருமான் தன் கோவிலில் வந்து அமர்ந்த பிறகு, வேலின் வீரியம் தாங்காமல் சிக்கல் சிங்காரவேலருக்கு வியர்க்கும். பட்டுத்துணியால் துடைக்கத் துடைக்க முத்து முத்தாக வியர்வை துளிர்த்துக் கொண்டே இருக்கும் அற்புதம் இன்றளவும் நடைபெறும் தலம் சிக்கல். 🎭 சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சம்ஹாரம் என்பது ஒரு பழமொழி. 🎭 இத்தலத்தில் கோயில் கொண்டுள்ள அம்பாள் வேல்நெடுங்கண்ணியிடம் வேல் வாங்கி திருச்செந்தூரில் சூரபத்மனை முருகப்பெருமான் சம்ஹாரம் செய்தார். இத்தலத்தில் கந்தசஷ்டி விழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. 🎭 எப்போதும் வற்றாத நீர்ப் பெருக்கையுடைய காவிரி நதி பாயும் நாடு சோழ நாடு “வான் பொய்ப்பினும் தான் பொய்யா மலைத்தலைய கடற் காவிரி” என்று பட்டினப் பாலை என்னும் நூல் கூறுகிறது. அண்ணல் பாகத்தையாளுடைய நாயகி உண்ணெகிழ் கருணையின் ஒழுக்கம் போன்றது” என்று சேக்கிழார் காவிரி நதியைப் போற்றுகிறார். சோழநாடு பூவினுள் பதுமம் போல்வது,கலைகளுள் ஞானம் போல்வது அறத்துள் இல்லறமே போன்று இலங்குவது. அத்தகைய நாட்டில் உள்ள சிவதத் தலங்களில் சிக்கல் ஒன்றாக விளங்குவது ஆம். அதன் பழம்பெரும் பெருமையை முறையாக காண்போம். 🅱 *நடை திறப்பு:*🅱 🗝 காலை 5.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். 🗝 🌻 *பூஜைவிவரம் : ஆறுகால பூஜைகள்*🌻 🅱 *பொது தகவல்:*🅱 🍁 இத்ததல விநாயகர், சுந்தர கணபதி என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். 🍁 எட்டுக்குடி, எண்கண், சிக்கல் ஆகிய மூன்று தலங்களில் விளங்கும் முருகப்பெருமான் ஒரே அமைப்புடைய மூர்த்திகளாக இருப்பதால் இவைகள் ஒரே சிற்பியால் வடிக்கப்பட்டது என்பர். 🍁 கோயிலின் வடமேற்கு மூலையில் ஆஞ்சநேயருக்கு தனி சன்னதி உள்ளது. 🍁 கோலமயில் வாகனன் புகழ்பாடும் கோயிலில் திருமால், கோவவாமனர் எனும் திருநாமத்தோடு எழிற்கோலம் விளங்க அருள்கோலம் பூண்டு தனி சன்னதி கொண்டிருக்கிறார். அவருக்கு எதிரே அனுமனும் காட்சியளிக்கிறார். 🅱 *பிரார்த்தனை:*🅱 🌹 கஷ்டங்கள் தீர இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர். 🅱 *நேர்த்திக்கடன்:*🅱 💥 பிரார்த்தனை நிறைவேறியதும் இத்தல இறைவன் வெண்ணெய்நாதருக்கு அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் உச்சிகால பூஜையின் போது வெண்ணெய் சாற்றி அர்ச்சனை செய்கின்றனர். 🅱 *தல வரலாறு:*🅱 ⛱ புராணகாலத்தில் மல்லிகைவனம் என்று அழைக்கப்பட்ட இத்தலத்தில் வசிஷ்ட முனிவர் ஆசிரமம் அமைத்துக் கொண்டு இத்தலத்து சிவபெருமானை வழிபட்டு வந்தார். அக்கால கட்டத்தில் விண்ணுலகத்திலிருக்கும் காமதேனு பசு, பஞ்ச காலத்தில் மாமிசம் தின்று விட்டதாகவும், இதை அறிந்த சிவன், பசுவை புலியாக மாறும் படி சபித்ததாகவும் கூறப்படுகிறது. வருந்திய புலி இறைவனிடம் மன்னிப்பு கேட்டது. மனமிறங்கிய சிவன், "பூலோகத்தில் மல்லிகாரண்யம் என்ற தலத்தில் நீராடி, அங்குள்ள இறைவனை பூஜித்தால் சாபம் விலகும்,'' என்றார். ⛱ தற்போதுள்ள ஆலயத்தின் மேற்குப் பக்கம் உள்ள பாற்குளம் என்றும் க்ஷீரபுஷ்கரணி என்றும் சொல்லப்படும் தீர்த்தத்தில் தன் பாவம் தீர நீராடியது. காமதேனு குளித்தபோது அதனுடைய பால் பெருகி குளம் முழுக்கப் பாலாக மாறியது. அங்கு வந்த வசிஷ்ட முனிவர் பால் குளத்தைப் பார்த்து அதில் இருந்து வெண்ணையை எடுத்து சிவலிங்கமாக்கி அதற்கு பூஜை செய்தார். பூஜையை முடித்தபின் அந்த சிவலிங்கத்தை வேறு இடத்தில் வைக்க எண்ணி அதை எடுக்க முயன்றார். அது இயலாமல் அந்த வெண்ணை லிங்கம் அவர் கையில் சிக்கிக் கொண்டது. அதனாலேயே இத்தலம் சிக்கல் என்ற பெயருடன் விளங்குகிறது என்று புராண வரலாறு கூறுகின்றது. வெண்ணெய் லிங்கத் திருமேனியான இறைவன் வெண்ணைப் பிராண் என்றும், நவநீத நாதர் என்றும் அழைக்கப்படுகிறார். வழிபாடு முடிந்தவுடன் இந்த லிங்கத்தை பெயர்த்து எடுக்கும் போது அது வராமல் சிக்கலை ஏற்படுத்தியதால் இத்தலம் "சிக்கல்' என்றழைக்கப்பட்டது. 🅱 *இருப்பிடம்:*🅱 ✈ திருவாரூர் - நாகப்பட்டினம் சாலையில், நாகப்பட்டினத் துக்கு முன்னதாக (சுமார் 4 கி.மீ. முன்னதாகவே) உள்ளது சிக்கல். திருச்சி, தஞ்சாவூர் மற்றும் திருவாரூரில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் பேருந்துகள் அனைத்தும் இத்தலத்தில் நின்று செல்லும். Google map link https://maps.app.goo.gl/jCNn9zkDrpaVY... தமிழ்