யூபிலி 2025 பாடல் | எரிகின்ற தீபமாய் | JUBILEE 2025 SONG IN TAMIL | St. PAULS, TRICHY
stpauls trichy
0:00 / 0:00
யூபிலி 2025 பாடல் | எரிகின்ற தீபமாய் | JUBILEE 2025 SONG IN TAMIL | St. PAULS, TRICHY
16 455 просмотров · 2 года назад
stpauls trichy
1,1 тыс. подписчиков
16 455 просмотров · 2 года назад
This is the JUBILEE 2025 song in Tamil based on Pope Francis' words.
தமிழில் யூபிலி 2025 பாடல்
As the Pope has announced this year, 2024 as the year of preparation by 'a great symphony of prayer,' this Tamil song எரிகின்ற தீபமாய் is created by St. Paul's Seminary (91, Bharathiyar Salai, Cantonment, Tiruchirappalli, TN) in order to use it for prayer in liturgical services and also for celebration during specific occasions.
2025 யூபிலிப் பாடல் - எரிகின்ற தீபமாய் ...
SONG CREDITS
JUBILEE SONG ORIGINAL - Pope Francis
LYRICS IN TAMIL - Fr. E. John Kulandai, St. Paul's
TUNE - Fr. E. John Kulandai & Fr. Varan, St. Paul's
SINGERS - Mr. Henry Robert, Trichy & Miss. Shiney Nisofrine, Trichy
VIDEO - Mrs. Sofia, Chennai
CHORUS SINGERS - Bros. Selva & Merjo, St. Paul's + Mrs. Renuka, Dindigul & Miss. Shiney Nisofrine
MUSIC DIRECTION - Mr. Henry Robert, Asaph Music Workstation, Trichy
OVER-ALL COORDINATION - Fr. Varan
SPECIAL THANKS to Fr. Michael Raj, St. Paul's
SPECIAL BLESSINGS of Most Rev. Dr. Arokiaraj, Bishop of Tiruchirappalli, who is the President of Tamil Nadu Bishop's Council Liturgical Commission.
SONG LYRICS
எரிகின்ற தீபமாய் ...
பல்லவி:
எரிகின்ற தீபமாய் எதிர்நோக்கு ஒளிர்கின்றது – இறைவா
எம் பாடல் உமை நோக்கி மகிழ்வாக எழுகின்றது.
அனுபல்லவி:
என்றென்றும் குறையாத உயிரூற்று நீரல்லவா – தலைவா
எம்வாழ்வில் யாமெல்லாம் உம்பாதம் சரணல்லவா!
எல்லோரும் (கோரஸ்):
வரலாற்று நாயகனே, வரும்வாழ்வும் வகுப்பவனே
நிறைவாக உன்பாதம் பணிகின்றோம்
இத்தனை ஆண்டுகளாய் பெற்றஉம் அன்பினையே
நித்தம் எம் வாழ்வாலே பாடிடுவோம்!
– பல்லவி
1
நாடுகள், மொழிகள், மக்கள் இனங்களுக்கே – ஒளியாய்த்
தேடிடும் உம்வாக்கு உடன்பிறப் பாகினாரே.
தன்பலம் இழந்து சிதறுண்ட மாந்தருக்கு
உம்மகன்தான் தங்கும் வீடாகினார்!
(வரலாற்று நாயகனே)
2
எத்தனை பரிவுமக்கு எத்தனை பொறுமை கண்டோம் - இறைவா!
அத்தனை மாந்தரையும் கரையேற்றும் அருள்கண்டோம்.
விண்ணுலகும் மண்ணுலகும் மறுஆக்கம் அடைந்திடுமே – தலைவா
விடுதலை வழங்குகின்ற ஆவியின் பொழிதலினால்
(வரலாற்று நாயகனே)
3
உம்பார்வை பூமியின்மேல் விழுந்தது மீட்பதற்கே – தந்தாய்
எம்கடவுள் எங்கள் காலத்துள்ளே பிறந்தாரே!
உமக்காய் எமக்காய் மனிதனானாரே
உமை அடைந்திட எம் வழியானாரே!
(வரலாற்று நாயகனே)