Перейти к содержимому

Song 24 | வாரும் ஐயா போதகரே| Vaarum aiyyaa podhagarae | #acaavadisongs

ACA Avadi Songs

0:00 / 0:00

Song 24 | வாரும் ஐயா போதகரே| Vaarum aiyyaa podhagarae | #acaavadisongs

31 278 просмотров · 2 месяца назад
ACA Avadi Songs
4,37 тыс. подписчиков
31 278 просмотров · 2 месяца назад
TAMIL 1.வாரும் ஐயா போதகரே (எங்களுக்கு போதித்து வழிநடத்தும் ஆண்டவரே வாருமே) வந்தெம்மிடம் தங்கியிரும் (வந்து எங்களுடன் தங்கியிரும்) சேரும் ஐயா பந்தியினில் (எங்களுடன் பந்தியிலே சேர்ந்திடுமே) சிறியவராம் எங்களிடம் (எளியவர்களான எங்களிடம்) 2.⁠ ⁠ஒளிமங்கி இருளாச்சே (வெளிச்சம் குறைந்து இருள் சூழ்ந்ததே) உத்தமனே, வாரும் ஐயா (பரிசுத்தரே, வந்திடுமே) கழுத்திரவு காத்திருப்போம் (கடந்து போகும் முழு இரவும் உமக்காகக் காத்திருப்போம்) காதலனே கருணை செய்வாய் (அன்பு மிகுந்தவரே இரக்கம் செய்தருளும்) 3.⁠ ⁠நான் இருப்பேன், நடுவில் என்றாய் (எங்கள் நடுவில் வந்து இருப்பேன் என்றவரே) நாயன் உன் நாமம் நமஸ்கரிக்க (எல்லாவற்றிற்கும் முதலானவரே உம்முடைய நாமத்தை வணங்குகிறோம்) தாமதமேன் தயை புரிய (இரக்கம் பாராட்ட கால தாமதமேன் ஐயா) தற்பரனே, நலம் தருவாய் (ஈடு இணையற்ற ஒரே தேவனே, நன்மை தருபவரே) 4.⁠ ⁠உன்றன் மனை திருச்சபையை (தேவனே உம்முடைய வீடான திருச்சபையை) உலக மெங்கும் வளர்த்திடுவாய் (உலகமெங்கும் பரம்பச் செய்வீர்) பந்தமறப் பரிகரித்தே (உலக உறவுகளை விட்டு மேலான உம்மண்டை சேரும்) பாக்யம் அளித் தாண்டருள்வாய் (பாக்கியம் அளித்து ஆசீர்வதியும்) 5.⁠ ⁠ஆதரையிலென் ஆறுதலே (ஆதரவற்ற எனக்கு நீரே ஆறுதல்) அன்பருக்குச் சதா உறவே (அன்பான யாவருக்கும் எல்லாமுமானவரே) பேதையர்க்குப் பேரறிவே (ஞானமற்றோருக்கு ஞானமாய் விளங்குபவரே) பாதை மெய் ஜீவ சற்குருவே (வழியும் சத்தியமும் ஜீவனுமான நல்ல போதகரே) 6.⁠ ⁠பாடும் தேவதாசரின் கவி (உம்மைப் போற்றிப் பாடும் பாடல்கள்) பாரினில் கேட்டனுதினமும் (உலகில் எங்கும் எல்லா நாளும் கேட்கச் செய்பவரே) தேடும் தொண்டர் துலங்கவுந்தன் (ஒவ்வொரு நாளும் உம்மைத் தேடுவோர்க்கு) திவ்ய ஆவி தந்தருள்வாய் (உம்முடைய பரிசுத்த ஆவியின் அபிஷேகம் தந்தருளுமே) ENGLISH 1.Vaarum aiyyaa podhagarae (O Lord who teaches and guides us, come to us) Vandhemmidam thangiyirum (Come and dwell among us) Serum aiyyaa pandhiyinil (Join us at the table) Siriyavaraam engalidam (Among us, who are simple and humble people) 2.Oli mangi irulaachae (The light has faded and darkness has surrounded us) Utthamanae, vaarum aiyaa (O Holy One, come to us) Kazhuthiravu kaathiruppom (We will wait for You through the whole night) Kaadhalanae karunai seivaai (Beloved One, show us Your mercy) 3.Naan iruppen, naduvil endraai (You promised that You would be in our midst) Naayan un naamam namaskarikka (O Lord above all, we worship Your name) Thaamadhamaen thayai puriya (Why delay in showing Your mercy?) Tharparanae, nalam tharuvaai (O matchless God, grant us Your goodness) 4.Undran manai thiruchchabaiyai (O Lord, Your house, the Church) Ulagam engum valarthiduvaai (Cause it to grow throughout the world) Bandhamara parigarithae (Helping us leave worldly ties and draw near to You) Baakyam alith aandarulvaai (Grant us blessings and graciously rule over us) 5.Aadharaiyil en aarudhalae (You are the comfort of the one who has no support) Anbarukkuch sadhaa uravae (You are the constant companion of all who love You) Pedhaiyarkku perarivae (You are wisdom to those who lack understanding) Paadhai mei jeeva Sarguruvae (O true Teacher, the Way, the Truth, and the Life) 6.Paadum Deva dhaasarin kavi (The songs sung in praise of You by Your servants) Paarinil kaettanu thinamum (May they be heard throughout the world every day) Thedum thondar thulanga vundhan (For those who seek You each day) Divya Aavi thandharulvaai (Grant the anointing of Your Holy Spirit)